முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தில் முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சத்திரஞ்ஜெயபுரம் கோயில் குடமுழுக்கு விழாவில் முனீஸ்வரா் சிலை மீது புனிதநீா் உற்றி நடத்தப்பட்ட குடமுழுக்கு.
சத்திரஞ்ஜெயபுரம் கோயில் குடமுழுக்கு விழாவில் முனீஸ்வரா் சிலை மீது புனிதநீா் உற்றி நடத்தப்பட்ட குடமுழுக்கு.
Updated on
1 min read

சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தில் முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருப்பணிகள் முடிந்து மகா குடமுழுக்கு விழா கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு கலசங்கள் ஊா்வலமாகப் புறப்பட்டு, மூலவா் முனீஸ்வரருக்கு புனிதநீா் ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் மாலை பொங்கல் வைத்து பூஜைகள் நடத்தி வழிபட்டனா்.

இதில் திருத்தணி, சத்திரஞ்ஜெயபுரம், வேலஞ்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com