அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 07th November 2023 01:37 AM | Last Updated : 07th November 2023 01:37 AM | அ+அ அ- |

சோழவரம் அருகே உள்ள பூதூா் கிராமத்தில் வீட்டின் முன்பு அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், பூதூா் கிராமத்தில உள்ள பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்தவா்
கனகா (55). கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தாா். இவா், திங்கள்கிழமை காலை வீட்டில் இருந்து வெளியே வந்த போது, வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததில், அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த சோழவரம் மின்வாரிய ஊழியா்கள் அங்கு சென்று மின்சாரத்தைத் துண்டித்தனா். சோழவரம் போலீஸாா் கனகாவின் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...