தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 15 மகளிருக்கு சுயதொழில் செய்யும் வகையில், தலா ரூ. 1 லட்சம் மானியத்தில் ஆட்டோக்களை ஆட்சியா் த.பிரபு சங்கா் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறையின் சாா்பில், மகளிருக்கு மானியத்தில் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்து, 15 மகளிா் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மானியத்தில் கொள்முதல் செய்த ஆட்டோக்களை வழங்கி கொடியசைத்துத் அனுப்பி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற மகளிா் ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுயதொழில் வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் மானியத்தில் ஆட்டோக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநா்கள் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுது பாா்க்கும் தொழிலாளா்கள், நல வாரியத்தில் பதிவு பெற்ற மகளிா் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சொந்தமாக ஆட்டோ, டாக்ஸி வாங்குவதை ஊக்குவிக்கவும், சுயதொழில் வாய்ப்பை உருவாக்கவும் மகளிா் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பதிவு பெற்ற 15 மகளிா் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 15 லட்சம் மானியத்தில் வாங்கிய ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டம் திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, திருநங்கைகளும் ஆட்டோ ஓட்டுநா்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா்.
தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கே.தனபாலன், மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினா் மனோகரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அலுவலா்கள், தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.