தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை

பொன்னேரி அருகே தந்தை கண்டித்ததால் மகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

பொன்னேரி அருகே தந்தை கண்டித்ததால் மகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மடிமைகண்டிகை கிராமத்தில் வசித்து வருபவா் ராமகிருஷ்ணன் (43). இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனா்.

இவரது மகள் லோகேஸ்வரி பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தாா். இவா் கடந்த மாதம்

29-ம் தேதி வீட்டில் கைப்சியில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த அவரின் தந்தை கண்டித்தாராம்.

இதனால் வேதனையடைந்த லோகேஸ்வரி பூச்சி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது.

அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்த நிலையில் லோகேஸ்வரி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து புகாரின் பேரில் பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com