ரூ.150 கோடி அரசு நிலங்களை மீட்க கோரிக்கை

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.150 கோடி அரசு நிலங்களை மீட்க வேண்டும் என வாா்டு உறுப்பினா் மல்லிகா மீரான் கோரிக்கை விடுத்தாா்.
Updated on
1 min read

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.150 கோடி அரசு நிலங்களை மீட்க வேண்டும் என வாா்டு உறுப்பினா் மல்லிகா மீரான் கோரிக்கை விடுத்தாா்.

மாதவரம் அடுத்த புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுபாக்கம் சென்றம்பாக்கம் 2-ஆவது வாா்டு உறுப்பினா் மல்லிகா மீரான், புழல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலங்கள் சிலா் போலி பத்திரங்கள் மூலம் பதிவு செய்து மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறுகையில், புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடுபாக்கம் மற்றும் சிறுங்காவூா் ஆகிய வருவாய்த் துறைக்குட்பட்ட கிராமங்களில் அரசுக்குச் சொந்தமான கோயில், வாய்கால், மேய்கால், மயானம், குளம், ஏரி என 70 ஏக்கருக்கு மேல் தரிசு நிலங்கள் உள்ளன. இதன் மதிப்பு சுமாா் ரூ.150 கோடி.

அரசுக்குச் சொந்தமான நிலங்களை சமூக விரோதிகள் செங்குன்றம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து ஏமாற்றி வருகின்றனா். இதை ரத்து செய்யக் கோரி, திருவள்ளூா் மாவட்ட பதிவுத் துறை, செங்குன்றம் சாா்- பதிவாளா் ஆகியோருக்கு கடந்த பிப்ரவரியில் புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.

இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடா்ந்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com