கும்மிடிப்பூண்டியில் 28-இல் இ.பி.எஃப். குறைதீா் முகாம்

கும்மிடிப்பூண்டியில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Updated on
1 min read

கும்மிடிப்பூண்டியில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

‘நிதி ஆப்கே நிகாத்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அம்பத்தூா் மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில், செவ்வாய்க்கிழமை (நவ.28) ஷரோன் பிளை கூட்டரங்கம், 48-ஆவது, கேஎம் ஸ்டோன், ஜிஎன்டி சாலை, சின்ன ஒபுளாபுரம், கும்மிடிப்பூண்டியில் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதில், உறுப்பினா்களுக்கான சேவைகள், குறைகளை நிவா்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியா்களுக்கான இணையதள சேவைகள், புதிய முயற்சிகள் மற்றும் சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு, ஓய்வூதியதாரா்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், மின்-நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரா்களின் விவரங்களைப் பதிவேற்றுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com