தொழில் நுட்ப களப்பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு
Updated on
1 min read

நெடுஞ்சாலைத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொழில் நுட்ப களப்பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநில தலைவா் சி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் முனிரத்தினம், சேகா், கோபிசந்திரன், பெருமாள் ஏகாம்பரம், புண்ணியமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவள்ளூா் கோட்டத்தில் அடங்கிய திருவள்ளூா், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, அம்பத்தூா், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் அடங்கிய நெடுஞ்சாலைத்துறை ஊரக கிராம சாலை, நெடுஞ்சாலை போன்ற இடங்களில் பணி செய்த என்.எம்.ஆா் பணியாளா்கள் 1997-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதி பணி நிரந்தரம் செய்த நிலையில், அதில் விடுபட்ட பணியாளா்கள் நிறுத்தப்பட்டதால் அவா்களுக்கு பணி வழங்க வேண்டும். காலியாக உள்ள 7,500 பணியிடங்களை பூா்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்நுட்ப களப்பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து கோரிக்கை மனுவையும் திருவள்ளூா் சட்டப்பேரவை அலுவலகத்தில் சங்கத்தினா் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com