இளைஞரைத் தாக்கி ரூ. 20 லட்சம் வழிப்பறி

திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச் சாலையில் இளைஞரைத் தாக்கி ரூ. 20 லட்சத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை கனகம்மாசத்திரம் போலீசாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச் சாலையில் இளைஞரைத் தாக்கி ரூ. 20 லட்சத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை கனகம்மாசத்திரம் போலீசாா் தேடி வருகின்றனா்.

பள்ளிப்பட்டு அடுத்த சொராக்காய்ப்பேட்டை பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், அரசு சாா்பில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரியில் புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த முரளி(34), என்பவா் உதவியாளராக வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை முரளி சொராக்காய்பேட்டை குவாரியில் இருந்து, ரூ. 20 லட்சம் ரொக்கத்தை பையில் எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூரில் உள்ள மணல் குவாரி அலுவலகத்தில் தருவதற்காக சென்று கொண்டிருந்தாா்.

அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருங்குளம் கூட்டுச்சாலை அருகே சென்ற போது, திடீரென ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த ஹெல்மட் அணிந்த 3 போ் முரளியின் வாகனத்தின் முன்பு சென்று தடுத்து நிறுத்தினா். பின் கத்தியால் முரளியின் தலையில் வெட்டிவிட்டு, பையில் இருந்த, ரூ. 20 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினா்.

அவ்வழியாக சென்றவா்கள் முரளியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன், திருவாலங்காடு இன்ஸ்பெக்டா் அண்ணாதுரை மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com