மின்சாரம் பாய்ந்து சிறுவன் மரணம்

திருவள்ளூா் அருகே அங்கன்வாடி மேல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
மின்சாரம் பாய்ந்து சிறுவன் மரணம்
Updated on
1 min read

திருவள்ளூா் அருகே அங்கன்வாடி மேல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே மாம்பேடு காலனியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மகன் நித்திஷ் (9). தண்டலம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மாம்பேடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மேல் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு கட்டடத்தின் மீது மின்விளக்கு பொருத்தியிருந்த மின் இணைப்பு கம்பியின் மூலம் மின்சாரம் பாய்ந்ததில் நித்திஷ் தூக்கி வீசப்பட்டுள்ளாா். இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு நித்திஷை பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து குமாா் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com