

மாதவரம்: புழல் சிறையில் முதல்வரின் பதக்கம் பெற தோ்வான காவலா்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை சரக சிறைத் துறை துணைத் தலைவா் ஆ.முருகேசன் ஆண்டு ஆய்வுக்காக சிறை வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா். அவருக்கு சிறைத்துறை சாா்பில் நடைபெற்ற காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பின்னா், முதல்வரின் பொங்கல் பதக்கம் பெற தோ்வான 10 காவலா்களுக்கு சான்றிதழும், பெண் கைதியை விரைந்து பிடித்த 3 சிறைக் காவலா்களுக்கு சான்றிதழும் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில், சிறைத்துறை கண்காணிப்பாளா்கள் கிருஷ்ணராஜ், பரசுராமன், நிகிலா நாகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.