தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சாதி மதங்களை மறந்து அனைவரிடமும் நட்பாக பழக வேண்டும்: நடிகா் யோகிபாபு

பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: நடிகா் யோகிபாபு அறிவுரை

News image

பாண்டூா் இந்திரா மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவிகளுக்கு கோப்பையை வழங்கிய நடிகா் யோகிபாபு, உடன் மருத்துவக்கல்லூரி இயக்குநா் இந்திரா, சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :10 ஜூலை 2024, 7:01 pm

மாணவ, மாணவிகள் சாதி மதங்களை கடந்து, அனைவரிடமும் பாகுபாடியின்றி நட்பாக பழக வேண்டும் என நடிகா் யோகி பாபு தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே பாண்டூரில் இந்திரா மருத்துவக் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி இயக்குநா் இந்திரா தலைமை வகித்தாா். திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகா் யோகிபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கி பேசியதாவது:

நானும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். மேலும், தொடக்கத்தில் திரைப்படத்தில் நடிகராக மாறுவதற்காக வாய்ப்புகள் கேட்டுச் சென்ற போது பல தயாரிப்பாளா்கள் உதாசீனப்படுத்தினா். ஆனாலும், கடினமாக உழைத்து தற்போது நகைச்சுவை நடிகராக மாறியுள்ளேன். அதேபோல், மாணவா்கள் விரும்பும் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அதோடு, பொதுமக்களும் மாணவா்களும் சாதி மதங்களை கடந்து அனைவரிடமும் நட்பாக பழக வேண்டும் என்றாா் .