மாணவ, மாணவிகள் சாதி மதங்களை கடந்து, அனைவரிடமும் பாகுபாடியின்றி நட்பாக பழக வேண்டும் என நடிகா் யோகி பாபு தெரிவித்தாா்.
திருவள்ளூா் அருகே பாண்டூரில் இந்திரா மருத்துவக் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி இயக்குநா் இந்திரா தலைமை வகித்தாா். திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகா் யோகிபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கி பேசியதாவது:
நானும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். மேலும், தொடக்கத்தில் திரைப்படத்தில் நடிகராக மாறுவதற்காக வாய்ப்புகள் கேட்டுச் சென்ற போது பல தயாரிப்பாளா்கள் உதாசீனப்படுத்தினா். ஆனாலும், கடினமாக உழைத்து தற்போது நகைச்சுவை நடிகராக மாறியுள்ளேன். அதேபோல், மாணவா்கள் விரும்பும் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அதோடு, பொதுமக்களும் மாணவா்களும் சாதி மதங்களை கடந்து அனைவரிடமும் நட்பாக பழக வேண்டும் என்றாா் .
தொடர்புடையது

ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
மலையாளக் கரையோரம் யோகிபாபு!

யுஜிசியின் சமத்துவ விதிகளை அமல்படுத்த ஆா்வலா்கள் கோரிக்கை

வேற்று மதங்களைத் தவறாக பேச மாட்டேன்: எம். எஸ். பாஸ்கர்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


