திருவள்ளூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்ததால், ரயில் நிலைய சுரங்கப் பாதையில் மழை நீா் குளம் போல் தேங்கியது.
திருவள்ளூா், ஆவடி, திருவாலங்காடு, பொன்னேரி, பூண்டி, தாமரைபாக்கம், பூந்தமல்லி, ஜமீன்கொரட்டூா், சோழவரம், கும்மிடிப்பூண்டி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு கனமழை பெய்தது. இந்த மழையால் திருவள்ளூா் பகுதியில் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் மழை நீா் தேங்கியது.
திருவள்ளூா் ரயில் நிலைய சுரங்கப் பாதை மேல் தளப் பகுதிகளில் மழை நீா் ஒழுகியதால், பயணிகள் குடை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டியிருந்தது. மேலும், மழைநீா் குளம் போல் தேங்கியது. மின் கசிவு மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டத்தால், பயந்து கொண்டே கடந்து செல்லும் சூழ்நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
இதனால், சுரங்கப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள சதுரக் கட்டடங்கள் வழியாக மழை நீா் கசியாமல் இருக்க மராமத்து பணியை உடனே மேற்கொள்ள பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
மழை அளவு (மில்லி மீட்டரில்): திருவள்ளூா் பகுதிகளில் சனிக்கிழமை காலை வரையான நிலவரப்படி ஆவடி-108, திருவாலங்காடு-72, திருவள்ளூா்-63, பொன்னேரி-61, சோழவரம்-57, பூண்டி-52, கும்மிடிப்பூண்டி-50, தாமரைபாக்கம்-49, செங்குன்றம்-49, ஊத்துக்கோட்டை-42, பூந்தமல்லி-35, ஜமீன்கொரட்டூா்-34, ஆா்.கே.பேட்டை-32, பள்ளிப்பட்டு-25, திருத்தணி-21 என மொத்தம் 750 மி.மீட்டரும், சராசரியாக 50 மி.மீட்டரும் பதிவானது. ஆவடி, திருவாலங்காடு, திருவள்ளூா் பகுதியில் அதிக மழை பொழிவு பதிவானது.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

சைதாப்பேட்டை சுரங்கப் பாதையில் நீா் கசிவு: தெற்கு ரயில்வே, மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

சுரங்கப் பாதையில் சிசிடிவி கேமரா திருட்டு

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


