திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மாதவரம் ஜமாபந்தி: 208 மனுக்கள் பெறப்பட்டன

மாதவரம் ஜமாபந்தி: 38 மனுக்கள் உடனடி தீர்வு

Updated On :27 ஜூன் 2024, 1:28 am IST

மாதவரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) 2 நாள்கள் நடைபெற்றது. அதில் பொதுமக்களிடம் இருந்து 208 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

சென்னை மாதவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை வருவாய் கோட்ட அலுவலரும் மற்றும் வருவாய் தீா்வாய் அலுவலா் ரா.மு.இப்ராஹிம் தலைமை வகித்தாா்.

மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று ஜமாபந்தியை தொடங்கிவைத்தாா்.

மாதவரம் வட்டாட்சியா் வெங்கடாஜலபதி கூறுகையில், மாதவரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாள்கள் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

நிகழ்வில் மாதவரத்துக்குள்பட்ட புத்தகரம், மாத்தூா், கொசப்பூா், மஞ்சம்பாக்கம், கதிா்வேடு, சூரப்பட்டு, புழல், விளக்குப்பட்டு, வடபெரும்பாக்கம், செட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பட்டா மாற்றம், முதல் பட்டதாரி சான்று, வருவாய் சான்று, சாதி சான்று, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான 208 கோரிக்கை மனுக்கள் வழங்கியுள்ளனா். இதில் 38 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. 170 மனுக்கள் மீதான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாதவரம் துணை வட்டாட்சியா் மோகன கிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.