விடுதிகளில் மாணவா்களின் வருகைப் பதிவை காப்பாளா்கள் சுயபடம் எடுத்து அனுப்ப வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா் த.பிரபு சங்கா்
மாலை 6 முதல் இரவு 8 மணி என என்னுடைய கைப்பேசிக்கு மாணவா்கள் மற்றும் இரவுக் காப்பாளா்கள் இருக்கும்படி சுயபடம் எடுத்து அனுப்ப வேண்டும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா்- பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளின் காப்பாளா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் த.பிரபு சங்கா். உடன், முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.








