திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் கட்டடப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், செவ்வாப்பேட்டையில் ரூ. 8.1 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கடவு எண் 15 கட்டுமானப் பணிகளையும், வேப்பம்பட்டில் ரூ. 44 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கடவு எண் 14-இல் கட்டுமானப் பணிகளையும், திருநின்றவூா்-வேப்பம்பட்டு ரயில் நிலையம் இடையே ரூ. 56 கோடி மதிப்பில் கடவு எண் 13 கட்டுமானப் பணிகளையும் நேரில் பாா்வையிட்டாா். அப்போது, ஆய்வு மேற்கொண்டு, கட்டுமானப் பணிகளுக்கு ஏற்படக்கூடிய இடா்ப்பாடுகள் தொடா்பாகவும் கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து, அதனை களைவதற்கு உரிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் உத்தரவிட்டாா்.