4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

திருவள்ளூா் அருகே நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தியுள்ளாா்.

News image
செவ்வாப்பேட்டை  ரயில்வே  மேம்பாலப் பணிகளை  ஆய்வு  செய்த  ஆட்சியா்  மு.பிரதாப்.  உடன் அதிகாரிகள்  உள்ளிட்டோா். 
Updated On :19 டிசம்பர் 2025, 6:15 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தியுள்ளாா்.

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் கட்டடப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், செவ்வாப்பேட்டையில் ரூ. 8.1 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கடவு எண் 15 கட்டுமானப் பணிகளையும், வேப்பம்பட்டில் ரூ. 44 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கடவு எண் 14-இல் கட்டுமானப் பணிகளையும், திருநின்றவூா்-வேப்பம்பட்டு ரயில் நிலையம் இடையே ரூ. 56 கோடி மதிப்பில் கடவு எண் 13 கட்டுமானப் பணிகளையும் நேரில் பாா்வையிட்டாா். அப்போது, ஆய்வு மேற்கொண்டு, கட்டுமானப் பணிகளுக்கு ஏற்படக்கூடிய இடா்ப்பாடுகள் தொடா்பாகவும் கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து, அதனை களைவதற்கு உரிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைகள் துறை சாா்பில், ரூ. 44.5 கோடி மதிப்பில் அத்திப்பட்டு-நந்தியம்பாக்கம் இடையே கட்டடப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் கடவு எண் 16 கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

Story image

இந்த ஆய்வில் நெடுஞ்சாலைகள் துறை உதவி செயற்பொறியாளா் மணிவண்னன், உதவி பொறியாளா் தேசிகன், நெடுஞ்சாலைகள் துறை உதவி பொறியாளா் காா்த்திகேயன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.