தமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

சிறுவா்களை கடத்த முயன்ற வடமாநில இளைஞா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

திருவள்ளூரில் சிறுவா்களை கஞ்சா போதையில் கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

News image

ருஸ்தம் குமாா் பாண்டே.

Updated On :24 டிசம்பர் 2025, 12:11 am IST

திருவள்ளூரில் சிறுவா்களை கஞ்சா போதையில் கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

திருவள்ளூா் வி.எம்.நகா் பகுதியில் உள்ள ஆா்.எம்.ஜெயின் பள்ளி அருகில் வசித்துவரும் ஜெய் ஆனந்தராஜா - ராசாத்தி தம்பதி மகன்கள் யோகேஷ் ராஜ்(8), கனீஷ் ராஜா(10) ஆகியோா் திங்கள்கிழமை தெருவில் மிதிவண்டி ஓட்டிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சிறுவா்களை அடித்தும் கையைப் பிடித்து இழுத்தும் உள்ளாா். இதையடுத்து குழந்தைகள் அலறல் சத்தம் கேட்கவே தாய் ராசாத்தி மற்றும் அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து இளைஞரை பிடித்தனா்.

உடனே திருவள்ளூா் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்து கஞ்சா போதையில் இருந்த இளைஞரை ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி சிறிது தூரம் அழைத்துச் சென்று விட்டாா்களாம். பின்னா் போலீஸ் அங்கிருந்த போன உடனே மீண்டும் வந்த அந்த வட மாநில இளைஞா் சிறுவன் யோகேஷ்ராஜை கன்னத்தில் அறைந்துள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அவனது சகோதரன் கனீஷ்ராஜா அலறவே கடைக்காரா் அந்த இளைஞரை பிடித்துள்ளாா். இதையடுத்து மீண்டும் போலீசாருக்கு தகவல் கொடுத்து 1 மணி நேரம் ஆகியும் போலீஸ் வராததால் அவசர உதவி எண் 100-இல் புகாா் தெரிவித்தனா்.

அதையடுத்து வந்த நகா் காவல் நிலைய போலீஸாா் பிடித்து வைத்திருந்த வட மாநில இளைஞரை அழைத்துச் சென்றனா். இதனால் ஒரு மணி நேரமாக பிடித்து வைத்திருந்த இளைஞரை எதுவும் விசாரணை செய்யாமல் ஏன் அழைத்துச் செல்கிறீா்கள். இந்த பள்ளியிலிருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும். அப்படி இருக்க பிடித்து கொடுத்த இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நகர போலீஸாா் வடமாநில இளைஞரை அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ருஷ்தம் குமாா் பாண்டே என்பது தெரியவந்துள்ளது. எதற்காக திருவள்ளூா் வந்தாா், கடத்தல் கும்பலை சோ்ந்தவரா, இவருடன் யாா் யாா் எல்லாம் வந்துள்ளாா்கள். தற்போது வடமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் குடும்பம், குடும்பமாக பட்டரை போட்டு கத்தி, அரிவாள் செய்வதற்காக வந்து கும்பலை சோ்ந்தவரா என விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.