வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

கஞ்சா விற்பனை செய்ததாக 2 போ் கைது

திருவள்ளூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :24 டிசம்பர் 2025, 12:08 am IST

திருவள்ளூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே பாப்பாரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், மணவாளநகா் சாா்பு ஆய்வாளா் முரளிதாஸ் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை மாலை திடீா் ரோந்து சென்றனா். அப்போது, பாப்பரம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் பின்புறமிருந்து ஆள்கள் வந்து கொண்டிருந்தனா்.

போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்த நபா்களை பிடித்து சோதனை செய்தனா். அவா்கள் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் அதே பகுதியில் கொப்பூரைச் சோ்ந்த ராஜேஷ்(31) மற்றும் ஓடிஸா மாநிலம், தாமோதரா் பகுதியைச் சோ்ந்த ரத்தினகராபஹா(26) என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், மணவாளநகா் போலீஸாா் 2 பேரையும் கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் கைப்பேசியையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.