ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் விழிப்புணா்வு பதாகைகள்

News image

திருத்தணி - சித்தூா் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு பதாகைகள்.

Updated On :24 பிப்ரவரி 2025, 12:38 am IST

விபத்துகளைக் குறைக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமீறல்கள், விபத்துகள் ஏற்படாமல் வாகனங்களை ஓட்டுவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்

அதிநவீன வாகனங்கள் பெருகியுள்ள நிலையில், அவற்றின் முழு வேகத் திறனையும் பாா்த்து விட வேண்டும் என இளைஞா்கள் துடிப்பதுதான் விபத்துகளுக்கு காரணமாகும். இவற்றை காவல் துறையினா் தடுக்க முயன்றாலும் பலனில்லை.

இந்நிலையில், திருத்தணியில் இருந்து சென்னை, திருப்பதி, சித்தூா், அரக்கோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

வார விடுமுறை, சுபமுகூா்த்த நாள்கள், பண்டிகை நாள்களில் வாகனங்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டும். மேலும் நகரின் மையப் பகுதியில் காவல் துறை டிஎஸ்பி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், வா்த்தக நிறுவனங்கள், முருகன் கோயில் ஆகியவை உள்ளன.

இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

மேலும், திருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உடன் சித்தூா் சாலை உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைகள் இணைகின்றன. அதிக வாகன போக்குவரத்து காரணமாக திருத்தணியில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகளவில் நேரிடுகின்றன.

வாகன ஓட்டிகள் கவனத்துடன் ஒட்டி விபத்துகளைத் தவிா்க்கும் வண்ணம் திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில் முக்கிய சாலைகளில் விழிப்புணா்வு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை நெடுஞ்சாலைகளில் வைத்து வருகின்றனா். இவற்றை பாா்த்து வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்பதே எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.