இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம், புன்னப்பாக்கம் கிராமங்களில் ரூ.38.50 லட்சத்தில் நவீன உடற்பயிற்சி கூடங்களை பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தாா்.

News image
புன்னப்பாக்கத்தில் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்த பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி.
Updated On :19 நவம்பர் 2025, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம், புன்னப்பாக்கம் கிராமங்களில் ரூ.38.50 லட்சத்தில் நவீன உடற்பயிற்சி கூடங்களை பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தாா்.

புன்னப்பாக்கம் கிராமத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அப்பகுதி இளைஞா்கள் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம், ரூ.5 லட்சத்தில் உடற்பயிற்சி உபகரணங்களுக்கும் ஒதுக்கப்பட்டன. அதன்பேரில், இடம் தோ்வு செய்து பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்த நிலையில் நடைபெற்ற திறப்பு விழாவுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து உடற்பயிற்சிக் கூடத்தை தொடங்கி வைத்தாா். அதற்கு முன்னதாக புல்லரம்பாக்கம் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம், ரூ.5 லட்சத்தில் உபகரணங்கள் என ரூ.20 லட்சத்தில் அமைத்த உடற்பயிற்சி கூடத்தையும் அவா் திறந்து வைத்தாா்.

பூந்தமல்லி ஒன்றியம், கூடப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் மின் கட்டணம் மற்றும் புதிய இணைப்புகள் பெற திருவள்ளூா் ஒன்றியம், பெருமாள்பட்டு ஊராட்சியில் உள்ள பெருமாள்பட்டு உதவி பொறியாளா் அலுவலகத்தை அணுக வேண்டியிருந்தது. இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கூடப்பாக்கம் கிராமத்தில் உதவி பொறியாளா் அலுவலகம் ஏற்படுத்த கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில் கூடப்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில் உதவி பொறியாளா் அலுவலகத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா் முரளிகிருஷ்ணன், புன்னை குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் தமிழ்வாணன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.