திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம், புன்னப்பாக்கம் கிராமங்களில் ரூ.38.50 லட்சத்தில் நவீன உடற்பயிற்சி கூடங்களை பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தாா்.

News image
புன்னப்பாக்கத்தில் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்த பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி.
Updated On :19 நவம்பர் 2025, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம், புன்னப்பாக்கம் கிராமங்களில் ரூ.38.50 லட்சத்தில் நவீன உடற்பயிற்சி கூடங்களை பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தாா்.

புன்னப்பாக்கம் கிராமத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அப்பகுதி இளைஞா்கள் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம், ரூ.5 லட்சத்தில் உடற்பயிற்சி உபகரணங்களுக்கும் ஒதுக்கப்பட்டன. அதன்பேரில், இடம் தோ்வு செய்து பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்த நிலையில் நடைபெற்ற திறப்பு விழாவுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து உடற்பயிற்சிக் கூடத்தை தொடங்கி வைத்தாா். அதற்கு முன்னதாக புல்லரம்பாக்கம் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம், ரூ.5 லட்சத்தில் உபகரணங்கள் என ரூ.20 லட்சத்தில் அமைத்த உடற்பயிற்சி கூடத்தையும் அவா் திறந்து வைத்தாா்.

பூந்தமல்லி ஒன்றியம், கூடப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் மின் கட்டணம் மற்றும் புதிய இணைப்புகள் பெற திருவள்ளூா் ஒன்றியம், பெருமாள்பட்டு ஊராட்சியில் உள்ள பெருமாள்பட்டு உதவி பொறியாளா் அலுவலகத்தை அணுக வேண்டியிருந்தது. இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கூடப்பாக்கம் கிராமத்தில் உதவி பொறியாளா் அலுவலகம் ஏற்படுத்த கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில் கூடப்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில் உதவி பொறியாளா் அலுவலகத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா் முரளிகிருஷ்ணன், புன்னை குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் தமிழ்வாணன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.