ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாதுகாவலருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image
Updated On :25 நவம்பர் 2025, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாதுகாவலருக்கு 20 ஆண்டுகள் சிைண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவள்ளூா் மாவட்டம், பொத்தூா் பகுதியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்து சிறுமி 8-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்த நிலையில் திருவண்ணாமலையைச் சோ்ந்த தேவேந்திரன்(47) என்பவா், பாதுகாவலராக பணியாற்றி வந்தாா். கடந்த 2020-இல் சிறுமியை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் விசாரணை செய்து தேவேந்திரனை போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதற்கிடையே திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தேவேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதம் விதித்தும் தீா்ப்பு வழங்கினாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக அரசு வழங்கவும் அவா் உத்தரவிட்டாா்.