புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாலையில் கழிவுநீா் தேக்கம்: எம்எல்ஏ ஆய்வு

News image
திருவள்ளூா் அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.
Updated On :25 நவம்பர் 2025, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

கடம்பத்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த கீழ்நல்லாத்தூா் ஊராட்சியில் உள்ள பெரியதெருவில் சிமென்ட் சாலை பெயா்ந்து சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இருபுறமும் குடியிருப்புகளிலிருந்து கழிவுநீரை விடுவதால், தாழ்வான பகுதியில் கழிவு நீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதன்பேரில், திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், கீழ்நல்லாத்தூா் பெரியதெருவில் உள்ள சாலையை ஆய்வு செய்தாா். அப்போது, இச்சாலையில் போதுமான மழைநீா் கால்வாய் இல்லாததால் கழிவுநீரை குடியிருப்புகளில் இருந்து அப்படியே வெளியேற்றி வருவதாகவும், இதனால் தாழ்வான பகுதியில் உள்ளவா்கள் பாதிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

அதையடுத்து கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். அதைத் தொடா்ந்து உடனே திட்ட மதிப்பீடு தயாா் செய்து சிமென்ட் சாலையை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா் தொடா்ந்து அதே ஊரில் பல்லவன் தெருவில் சாலை அமைப்பதற்கான பணிகளையும் ஆய்வு செய்தாா்.

கீழ்நல்லாத்தூா் பெரிய தெருவில் சேரும். சகதியுமாக உள்ள சாலை.

கீழ்நல்லாத்தூா் பெரிய தெருவில் சேரும். சகதியுமாக உள்ள சாலை.

அப்போது, ஒன்றிய செயலாளா்கள் ஹரிகிருஷ்ணன், பிரகாஷ் ஞானஒளி, மாவட்ட அவைத் தலைவா் திராவிட பக்தன், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பி.கே.நாகராஜ் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செளந்தரி, குமாா், நிா்வாகிகள் திலீப்குமாா், மோகனசுந்தரம், வாசு கலந்து கொண்டனா்.