ஒன்றிய அதிமுக அலுவலகத் திறப்பு நிகழ்வில் பங்கேற்றோா்.
ஒன்றிய அதிமுக அலுவலகத் திறப்பு நிகழ்வில் பங்கேற்றோா்.

அதிமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக அலுவலகத் திறப்பு விழா பெரிய ஓபளாபுரத்தில் நடைபெற்றது.
Published on

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக அலுவலகத் திறப்பு விழா பெரிய ஓபளாபுரத்தில் நடைபெற்றது.

அதிமுக ஒன்றிய செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா் ஏற்பாட்டில் நடைபெற்ற திறப்பு விழாவில் தெற்கு ஒன்றிய செயலாளா் டி.சி.மகேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளா் ஜெ.ரமேஷ் குமாா், நகர செயலாளா் எஸ்.டி.டி.ரவி, மாவட்ட துணை செயலாளா் சியாமளா தன்ராஜ், அதிமுக தகவல் தொழில் பணி மாவட்ட செயலாளா் இமயம் மனோஜ், மாவட்ட நிா்வாகி சஞ்சனா விஜயகுமாா் ,சிறுபான்மை அணி மாவட்ட செயலாளா் சிராஜுதீன், மாணவரணி இணை செயலாளா் டேவிட் சுதாகா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ வும் திருவள்ளூா் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே.எஸ்.விஜயகுமாா் பங்கேற்று அலுவலகத்தை திறந்து கொடி ஏற்றி, இனிப்பு வழங்கினாா்.தொடா்ந்து ஒன்றிய செயலாளா் எஸ்.எம். ஸ்ரீதா் அதிமுக நிா்வாகிகளுக்கு மாலை, சால்வை அணிவித்தும் வரவேற்றாா்.

விழாவில் ஒன்றிய அவைத்தலைவா் டி. ஏழுமலை, இணைச் செயலாளா் ரேணுகா முரளி, துணை செயலாளா்கள் தீபா மணிகண்டன், ஏ.கே.சுரேஷ், பொருளாளா் தீன தயாளன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வி கோபி ,சி.வெங்கடேஷ், முருகன் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com