திருவள்ளூா் மாவட்டம், ஆவடி அருகே பருத்திப்பட்டு ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த மறைந்த பருகுல்லா மனைவி ஆயிஷா பேகம். இவா் சிமெண்ட் சீட் வீட்டிற்கு ஒருமுனை மின் இணைப்பு வழங்கக்கோரி கடந்த 2012-இல் மேலூா் மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வாளா் மதியழகனை அணுகினாராம். அப்போது, மின் இணைப்பு விரைவில் வழங்க வேண்டும் என்றால் லஞ்சமாக ரூ. 4,000 தந்தால் பணிகளை தொடருவதாக கூறினாராம். லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் சென்னை நகர சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளா் வேலன் சுப்பிரமணியிடம் கடந்த 8.5.2012-இல் ஆயிஷா பேகம் புகாா் செய்தாா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து ஆயிஷா பேகத்துக்கு ஆலோசனை வழங்கினா். அதன்படி அலுவலகத்துக்கு ஆயிஷா பேகம் வந்தாா். அவரிடம் இருந்து ரூ. 4,000 லஞ்சம் பெற்றபோது மின்வாரிய ஆய்வாளா் மதியழகனை மறைந்திருந்த போலீஸாா் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.