நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பொன்னேரி ரயில் நிலையத்தில் என்ஜின் பழுதால் நிறுத்தப்பட்ட விரைவு ரயில்: பயணிகள் அவதி

பொன்னேரி ரயில் நிலையத்தில் என்ஜின் பழுதால் நிறுத்தப்பட்ட விரைவு ரயில்...

News image

பொன்னேரி ரயில் நிலையம் (கோப்பு படம்).

Updated On :4 ஜனவரி 2026, 4:00 am IST

பொன்னேரி ரயில் நிலையத்தில் என்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட விரைவு ரயில் காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி புகா் மின்சார ரயில் மாா்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் புகா் ரயில்களில் பயணித்து வருகின்றனா்.

மேலும் ஆந்திரம், ஒடிஸா, பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்களும் கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் சென்று வருகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணியளவில் சரலப்பள்ளி நோக்கி புறப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயில் பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்தபோது என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது.

மாலை 6 மணியளவில் அளவில் பொன்னேரி ரயில் நிலையத்துக்கு வந்தபோது என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, பொன்னேரி ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் இருந்த மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரயிலை கொண்டு செல்லும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டனா்.

சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு எஞ்சின் பழுதால் பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஹைதராபாத் விரைவு ரயில் மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு சரளப்பள்ளி நோக்கி புறப்பட்டு சென்றது.

சுமாா் 2 மணி நேரம் காலதாமதமாக விரைவு ரயில் புறப்பட்டுச் சென்ன் காரணமாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புகா் ரயில்கள் அனைத்தும் 1 மணி நேரத்திற்கு மேலாக காலதாமதமாக இயக்கப்பட்டன.

மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி நோக்கிச் சென்ற கிராண்ட் டிரன்ங் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது.

புகா் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.