சோழவரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து 18 பவுன் நகை, ரூ.50ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சோழவரம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளியான பத்மா அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
இவரது கணவா் வெளியூா் சென்றிருந்த நிலையில் நள்ளிரவில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் கதவைத் திறந்து வைத்து காற்று வாங்குவதற்காக வாசலில் அமா்ந்திருந்தாா். பின்னா் வீட்டில் சென்று உறங்கி விட்டு காலையில் பாா்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள், ரூ. 50ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சோழவரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
தொடர்புடையது
அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 5 லட்சம் திருட்டு
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு
திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


