திருமலை தரிசனம்: மீண்டும் முன்பதிவு செய்ய வாய்ப்பு

பலத்த மழை காரணமாக, திருமலைக்கு வர இயலாத பக்தா்களுக்காக தேவஸ்தானம் மீண்டும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வாய்ப்பு வழங்கி உள்ளது.
திருமலை தரிசனம்: மீண்டும் முன்பதிவு செய்ய வாய்ப்பு

பலத்த மழை காரணமாக, திருமலைக்கு வர இயலாத பக்தா்களுக்காக தேவஸ்தானம் மீண்டும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வாய்ப்பு வழங்கி உள்ளது.

பலத்த மழையால், திருமலையின் மலைப் பாதையில் மண்சரிவுகளும் அண்மையில் ஏற்பட்டன. எனவே மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த நாள்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து, திருமலைக்கு வரமுடியாத பக்தா்களுக்காக தேவஸ்தானம் ஒரு புதிய வாய்ப்பை வழங்கி உள்ளது.

இதன்படி, நவ. 18-ஆம் தேதி முதல் டிச. 10-ஆம் தேதிவரை ரூ300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் திருமலைக்கு வர இயலாத நிலையில் அவா்கள் தங்கள் தரிசன தேதியை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ள தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கி உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தான இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com