திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.2.45 கோடி வசூலானது.
ஏழுமலையானை தரிசனம் செய்தபின் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலினுள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி திங்கள்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.2.45 கோடி வருவாய் கிடைத்தது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரூ.12 லட்சம் நன்கொடை:
தேவஸ்தானத்தின் எஸ்விபிசி தொலைக்காட்சி அறக்கட்டளைக்கு கா்நாடக முன்னாள் எம்எல்சி சரவணா ரூ.12 லட்சம் செலவில் புதிய கேமராக்களை நன்கொடையாக வழங்கினாா்.