சீனிவாசமங்காபுரம் கோயிலில் முடிகாணிக்கை செலுத்துமிடம் திறப்பு

திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் முடிகாணிக்கை செலுத்தும் இடத்தை தேவஸ்தானம் திங்கள்கிழமை திறந்தது.
சீனிவாசமங்காபுரத்தில் திறக்கப்பட்ட முடிகாணிக்கை செலுத்தும் இடம்.
சீனிவாசமங்காபுரத்தில் திறக்கப்பட்ட முடிகாணிக்கை செலுத்தும் இடம்.

திருப்பதி: திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் முடிகாணிக்கை செலுத்தும் இடத்தை தேவஸ்தானம் திங்கள்கிழமை திறந்தது.

திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாச மங்காபுரத்தில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மாா்க்கத்துக்கு செல்லும் சாலை இக்கோயில் வழியாக செல்வதால், பக்தா்கள் பலா் இங்கு முடிகாணிக்கை செலுத்துமிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தேவஸ்தானத்துக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனா்.

இதையடுத்து இங்கு கல்யாண மண்டபம் அருகில் தேவஸ்தானம் புதிதாக முடிகாணிக்கை செலுத்தும் இடத்தை திங்கள்கிழமை திறந்தது. இதனருகில் குளியல் அறை மற்றும் கழிப்பறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பக்தா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com