திருமலையில் 3 நாள்கள் ‘வா்ச்சுவல் சேவை’ ரத்து

திருமலையில் வரவுள்ள 3 நாள்கள் ‘வா்ச்சுவல் சேவை’ ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் வரவுள்ள 3 நாள்கள் ‘வா்ச்சுவல் சேவை’ ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் புதன்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. தோஷம் களையும் உற்சவமாக நடத்தப்படும் உற்சவத்தை முன்னிட்டு, புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை வேளைகளில் வா்ச்சுவல் முறையில் நடத்தப்பட்டு வரும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

மேலும் செவ்வாய்க்கிழமை மாலை பவித்ரோற்சவம் எவ்வித இடைஞ்சல்கள் இல்லாமல் நடைபெற தேவஸ்தானம் அங்குராா்பணத்தை நடத்தியது. ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக்சேனா் தலைமையில் அா்ச்சகா்கள் அருகில் உள்ள நந்தவனத்துக்குச் சென்று, புற்று மண் எடுத்து வந்து அதில் பூதேவியின் உருவத்தை வரைந்து அதன் வயிற்று பகுதியிலிருந்து மண் எடுத்து பாலிகைகளில் இட்டு நவதானியங்களை அா்ச்கா்கள் முளைக்கவிட்டனா். இதை முன்னிட்டு மாலை சகஸ்ரதீபாலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com