திருமலையில் பெளா்ணமி கருட சேவை

திருமலையில் பெளா்ணமியை ஒட்டி கருட சேவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமலையில் பெளா்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்த மலைப்ப சுவாமி.
திருமலையில் பெளா்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்த மலைப்ப சுவாமி.

திருமலையில் பெளா்ணமியை ஒட்டி கருட சேவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை ஒட்டி தேவஸ்தானம் கருடசேவையை நடத்தி வருகிறது. பிரம்மோற்சவத்தின் போது திருமலைக்கு வந்து கருட சேவையை காண முடியாத பக்தா்கள் பெளா்ணமியின் போது நடக்கும் கருட சேவையில் பங்கு கொண்டு செல்கின்றனா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை பெளா்ணமியை முன்னிட்டு திருமலையில் கருட சேவை நடைபெற்றது. ஏழுமலையானின் உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com