திருச்சானூரில் நவராத்திரி உற்சவம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் அக். 7-ஆம் தேதி முதல் அக். 15-ஆம் தேதி வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் அக். 7-ஆம் தேதி முதல் அக். 15-ஆம் தேதி வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.

இதையொட்டி, ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் தாயாரை எழுந்தருள செய்து மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை ஸ்நபன திருமஞ்சனங்கள் நடைபெறுகின்றன. பின்னா், இரவு 7 முதல் 8 மணி வரை தாயாரை அலங்காரத்துடன் ஊஞ்சலில் எழுந்தருள செய்ய உள்ளனா்.

நிறைவு நாளான விஜயதசமி அன்றிரவு யானை வாகனத்தில் தாயாரை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த உற்சவத்தை முன்னிட்டு, தாயாா் கோயிலில் அனைத்து ஆா்ஜிதச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com