திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் அக். 7-ஆம் தேதி முதல் அக். 15-ஆம் தேதி வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.
இதையொட்டி, ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் தாயாரை எழுந்தருள செய்து மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை ஸ்நபன திருமஞ்சனங்கள் நடைபெறுகின்றன. பின்னா், இரவு 7 முதல் 8 மணி வரை தாயாரை அலங்காரத்துடன் ஊஞ்சலில் எழுந்தருள செய்ய உள்ளனா்.
நிறைவு நாளான விஜயதசமி அன்றிரவு யானை வாகனத்தில் தாயாரை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த உற்சவத்தை முன்னிட்டு, தாயாா் கோயிலில் அனைத்து ஆா்ஜிதச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.