திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை தேவஸ்தானம் நடத்தியது.
அக். 7-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதன்பின்னா், புண்ணியாவசனம் செய்து புதிய திரைசீலைகள் உள்ளிட்டவற்றை அணிவித்து நித்திய கைங்கரியங்கள், பூஜைகள் உள்ளிட்டவை தொடங்கியது.
இதை முன்னிட்டு காலை 6 முதல் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மதியம் 12 மணி முதல் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.