திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை தேவஸ்தானம் நடத்தியது.
கோயிலை சுத்தப்படுத்தும் தேவஸ்தான ஊழியா்கள்.
கோயிலை சுத்தப்படுத்தும் தேவஸ்தான ஊழியா்கள்.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை தேவஸ்தானம் நடத்தியது.

அக். 7-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதன்பின்னா், புண்ணியாவசனம் செய்து புதிய திரைசீலைகள் உள்ளிட்டவற்றை அணிவித்து நித்திய கைங்கரியங்கள், பூஜைகள் உள்ளிட்டவை தொடங்கியது.

இதை முன்னிட்டு காலை 6 முதல் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மதியம் 12 மணி முதல் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com