திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.2.67 கோடி வசூலானது.
திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தபின் காணிக்கைகளை அங்குள்ள ஸ்ரீவாரி உண்டியலில் பக்தா்கள் செலுத்தி வருகின்றனா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 2.67 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.