திருமலையில் நவ. 4-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆஸ்தானம் நடைபெற உள்ளது. எனவே, நவ. 4-ஆம் தேதி காலை விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இதனால், நவ. 3-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனத்துக்காகப் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.