திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.2.17 கோடி வசூலானது.
திருமலையில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவில் சில்லரை, ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணங்கள் என பிரித்து கணக்கிட்டு மொத்தத் தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
அவ்வாறு பக்தா்கள் செவ்வாய்க்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ.2.17 கோடி வருவாய் கிடைத்தது.