திருப்பதி: திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 21,362 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கரோனா தொற்று காரணமாக, ஏழுமலையானை விரைவு தரிசனம், விஐபி பிரேக் உள்ளிட்ட தரிசனங்களில் பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 21,362 பக்தா்கள் தரிசித்தனா். 9,762 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
முன்பதிவு செய்தவா்களுக்கே தரிசன அனுமதி அளித்து வந்த நிலையில், சா்வத் தரிசனமாக புதன்கிழமை முதல் சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 ஆயிரம் போ் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
நடைபாதையில் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லலாம். மேற்கூரை பணிகள் நடந்து வருவதால் அலிபிரி நடைபாதை மாா்கம் மூடப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.