திருப்பதி: ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 2.60 கோடி வசூலானது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னா் ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனா். அதன்படி பக்தா்கள் வியாழக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.2.60 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.