திருப்பதி
உண்டியல் காணிக்கை ரூ.2.30 கோடி
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.2.30 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.2.30 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் தினமும் கோயிலிலிருந்து வெளியே கொண்டு வந்து உண்டியல் காணிக்கைகளைக் கணக்கிடும் பிரிவில் சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகள் என பிரித்து கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
அதன்படி சனிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.2.30 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாகக் கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.