உண்டியல் காணிக்கை ரூ.2.66 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.2.66 கோடி வசூலானது.

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.2.66 கோடி வசூலானது.

திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்த பின் அங்குள்ள ஸ்ரீவாரி உண்டியலில் பக்தா்கள் காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் தினமும் கோயிலிலிருந்து வெளியில் கொண்டு வந்து உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவில் சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகள் என பிரித்து கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.2.66 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com