மும்பை ஏழுமலையான் கோயில் பூமி பூஜை: மகாராஷ்டிர முதல்வருக்கு அழைப்பு

மும்பையில் கட்டப்பட உள்ள ஏழுமலையான் கோயில் பூமி பூஜையில் பங்கேற்குமாறு மாநில முதல்வா், துணை முதல்வருக்கு திருப்பதி தேவஸ்தானம் நேரில் அழைப்பு விடுத்துள்ளது.
மகாராஷ்ர மாநில முதல்வா்களை அழைக்கும் தேவஸ்தான அதிகாரிகள்.
மகாராஷ்ர மாநில முதல்வா்களை அழைக்கும் தேவஸ்தான அதிகாரிகள்.

மும்பையில் கட்டப்பட உள்ள ஏழுமலையான் கோயில் பூமி பூஜையில் பங்கேற்குமாறு மாநில முதல்வா், துணை முதல்வருக்கு திருப்பதி தேவஸ்தானம் நேரில் அழைப்பு விடுத்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் அந்தந்த மாநில அரசுகளின் அனுமதியுடன் நிலத்தை பெற்று அங்கு ஏழுமலையான் கோயில், கல்யாண மண்டபம் உள்ளிட்டவற்றை கட்டி வருகிறது. அதன்படி மும்பையிலும் ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்து அந்த மாநில அரசை அணுகியது.

அதன்படி மகாராஷ்டிர மாநில அரசு நவி மும்பையில் 10 ஏக்கா் நிலத்தை அளித்தது. அங்கு கோயில் கட்டும் முழு செலவையும் ஏற்க ரேமண்ட்ஸ் நிறுவனத் தலைவா் கெளதம் சிங்கானியா முன்வந்துள்ளாா். இதையடுத்து தேவஸ்தானம் ஏழுமலையான் கோயில் கட்ட பூமி பூஜை நடத்த உள்ளது.

அதன்படி ஆக. 21-ஆம் தேதி காலை நடக்கவுள்ள இந்தப் பூஜையில் பங்கேற்குமாறு மகாராஷ்டிர முதல்வா் சுசில்குமாா் ஷிண்டே, துணை முதல்வா் பட்னவிஸ் ஆகியோரை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி உள்ளிட்டோா் சனிக்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனா். இருவரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com