திருமலையில் 87,600 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையானை கோயிலில் திங்கள்கிழமை 87,692 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 36,832 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானை கோயிலில் திங்கள்கிழமை 87,692 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 36,832 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 10 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com