திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 33,000 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இவா்களில் 13,954 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
கரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத பக்தா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை மாா்க்கமாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைபாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தரிசனம், வாடகை அறைகளில் ஏற்பட்ட சிரமங்கள், குறைகள் குறித்து தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.