திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 75,345 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 36,091 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தா்களின் வருகை வெகுவாக அதிகரித்ததால் அவா்களை டிக்கெட் இன்றி திருமலைக்கு தேவஸ்தானம் அனுப்பி வருகிறது.
பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் மண்டப காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 26 அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இதில் தா்ம தரிசனத்துக்கு 9 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. த
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.