ஏழுமலையான் தா்ம தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருந்த பக்தா்கள்

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் பக்தா்கள் புதன்கிழமை 6 மணிநேரம் காத்திருந்தனா்.

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் பக்தா்கள் புதன்கிழமை 6 மணிநேரம் காத்திருந்தனா்.

புதன்கிழமை காலை நிலவரப்படி பக்தா்கள் திருமலை வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 12 அறைகளில் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 6 மணி நேரம் ஆனது. ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமானது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை 77,154 பக்தா்கள் ஏழுமலையானை வழிபாடு செய்தனா். 30,182 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தொடங்கப்பட்டுள்ளது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com