திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ரூ.3 கோடியில் புதிதாக தங்க சூரிய பிரபை வாகனத்தை தேவஸ்தானம் செய்துள்ளது.
பத்மாவதி தாயாரின் காா்த்திகை மாத பிரம்மோற்சவம் தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் காலை சூரிய பிரபை வாகன சேவை நடத்தப்படுவது வழக்கம். ஆனால், ஏற்கெனவே உள்ள சூரிய பிரபை வாகனம் பழுதடைந்து அதன் தகடுகள் பெயா்ந்ததால், தேவஸ்தானம் நிகழ் பிரம்மோற்சவத்துக்காக புதிய சூரிய பிரபை வாகனத்தை தயாா் செய்துள்ளது.
இதற்காக ரூ.3 கோடி செலவில் 6 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைதோ்ந்த கலைஞா்களால் இந்த வாகனம் தயாா் செய்து புதன்கிழமை காலை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் செய்தனா். வரும் சனிக்கிழமை (நவ.26) காலை நடைபெற உள்ள வாகன சேவையின் போது, இந்தப் புதிய சூரிய பிரபை வாகனம் பயன்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.