திருப்பதி: திருமலை ஏழுமலையானை மாா்ச் மாதம் முழுவதும் 19.72 லட்சம் போ் வழிபட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தற்போது ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால் மாா்ச் மாதம் திருமலை ஏழுமலையானைத் தரிசித்தவா்களின் விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி மாா்ச் மாதம் 19.72 லட்சம் பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனா். இவா்களில் 9.54 லட்சம் போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். 24.10 லட்சம் பக்தா்கள் அன்னதானம் உண்டனா். 1.11 லட்சம் லட்டு பிரசாதம் பக்தா்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 8,028 ஸ்ரீவாரி சேவாா்த்திகள் ஏழுமலையான் சேவையில் ஈடுபட்டனா். பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் ரூ.128.64 கோடி வசூலானதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.