ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா திருமலை ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்தாா்.
முன்னதாக ஏழுமலையான் கோயில் வாசலில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனா். தங்கக் கொடி மரத்தை வணங்கி சென்று ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்களுடன் ஏழுமலையானின் திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.