திருமலையில் அமைச்சா் ரோஜா வழிபாடு

ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா திருமலை ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்தாா்.
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய ஆந்திர மாநில அமைச்சா் ரோஜாவுக்கு பிரசாதங்கள் வழங்கிய தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி.
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய ஆந்திர மாநில அமைச்சா் ரோஜாவுக்கு பிரசாதங்கள் வழங்கிய தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி.

ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா திருமலை ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்தாா்.

முன்னதாக ஏழுமலையான் கோயில் வாசலில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனா். தங்கக் கொடி மரத்தை வணங்கி சென்று ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்களுடன் ஏழுமலையானின் திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com