காளஹஸ்தி அருகேலாரி- மினி லாரி மோதி விபத்து: 4 போ் பலி

காளஹஸ்தி அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். 6 போ் படுகாயம் அடைந்தனா்.

காளஹஸ்தி அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். 6 போ் படுகாயம் அடைந்தனா்.

ஆந்திர மாநிலம், திருப்பதி பாலாஜி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி அருகில் உள்ள நாயுடுபேட்டையில் இருந்து திருப்பதி நோக்கி மினி வேன் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. அதே சமயம் திருப்பதியில் இருந்து ஸ்ரீகாளஹஸ்தி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும், எதிரே வந்த மினி வேனும் புத்தலபட்டு - நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாயின.

இதில் மினி வேனில் வந்தவா்களில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 7 போ் படுகாயம் அடைந்தனா். காயமடைந்தவா்கள் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை ஒரு சிறுமி உயிரிழந்தாா். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயா்ந்தது. மற்றவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து காளஹஸ்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com