திருமலையில் ஏழுமலையானை ஒடிஸா மாநில ஆளுநா் கணேஷி லால் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தாா்.
ஒடிஸா மாநில ஆளுநா் கணேஷி லால் திங்கள்கிழமை திருமலைக்கு வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று இரவு தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளைச் செய்தளித்தனா். இரவு திருமலையில் தங்கிய அவா் செவ்வாய்க்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தாா்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதம் அளித்து சேஷ வஸ்திரம் அணிவித்து வேத ஆசீா்வாதம் செய்வித்தனா். வெளியில் வந்த ஆளுநா் ஏழுமலையான் தரிசனம் மனத்துக்கு அமைதியை அளித்தது என்றாா்.